நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கிராம கோயில் பூசாரிகள் பேரவை, பூ கட்டுவோர் பேரவை, அருள்வாக்கு அருள்வோர் பேரவைக் கூட்டமைப்பு மற்றும் விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி அ.இ.அ.தி.மு.க.வுக்கு முழு ஆதரவு
Apr 22 2014 10:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவை, கிராம கோயில் பூசாரிகள் பேரவை, பூ கட்டுவோர் பேரவை, அருள்வாக்கு அருள்வோர் பேரவைக் கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் நிர்வாகிகள் ஆகியோர், நேற்று நேரில் சந்தித்து, நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு தங்களின் முழு ஆதரவைத் தெரிவித்தனர்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி. ஜெ. ஜெயலலிதாவை, நேற்று, கிராம கோயில் பூசாரிகள் பேரவை, பூ கட்டுவோர் பேரவை, அருள்வாக்கு அருள்வோர் பேரவை கூட்டமைப்பின் நிர்வாக அறங்காவலர் திரு. எஸ். வேதாந்தம், கிராம கோயில் பூசாரிகள் பேரவையின் மாநில அமைப்பாளர் திரு. எஸ். ராஜா, பூ கட்டுவோர் பேரவையின் மாநில அமைப்பாளர் திரு. துரை. ரமேஷ், அருள்வாக்கு அருள்வோர் பேரவையைச் சேர்ந்த திருமதி. முனியம்மாள் உள்ளிட்டோரும் - விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் திரு. குடந்தை அரசன், மாநில அமைப்புச் செயலாளர் திரு. ச. அருண்மாசிலாமணி, தலைமை நிலையச் செயலாளர்களான திரு. இரா. வினோத்குமார், திரு. அலெக்சாண்டர் உள்ளிட்டோரும் நேரில் சந்தித்து, வரும் 24ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க.வுக்கு தங்களின் முழு ஆதரவைத் தெரிவித்தனர். அதற்கு, கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி. ஜெயலலிதா, தமது நன்றியினைத் தெரிவித்துக்கொண்டார். அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில், பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திவரும் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவின் கரங்களை மென்மேலும் வலுப்படுத்தும் வகையில், நாடாளுமன்றத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க.வுக்கு முழு அதரவு அளிக்கப்போவதாக முதலமைச்சரை நேரில் சந்தித்த அமைப்புகளின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.