மக்களவைத் தேர்தலில் விஜயகாந்தையும், வைகோவையும் புறக்கணிக்கப்போவதாக அகில இந்திய தெலுங்கர் முன்னேற்றக் கழகம் அறிவிப்பு
Apr 23 2014 3:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெள்ளையனை எதிர்த்துப் போராடிய வீரபாண்டிய கட்டபொம்மன் விழாவையும், மன்னர் திருமலைநாயக்கருக்கு நடத்தப்படும் விழாவையும் புறக்கணிப்பதோடு, தெலுங்கு பேசும் மக்களுக்கு தங்கள் கட்சிகளில் எந்தவொரு முக்கியத்துவமும் அளிக்காத விஜயகாந்தையும், வைகோவையும் மக்களவைத் தேர்தலில் புறக்கணிக்கப்போவதாக அகில இந்திய தெலுங்கர் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.
அகில இந்திய தெலுங்கர் முன்னேற்றக் கழக நிறுவனர் திரு.கட்டபொம்மன் கந்தசாமி, தேனியில் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு கயத்தாறில் மணிமண்டபம் கட்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டதோடு, தமது அரசில் பல்வேறு பதவிகளில் தெலுங்கு பேசும் மக்களுக்கு வாய்ப்பு அளித்திருப்பதாகவும் குறிப்பிட்டார். தெலுங்கு பேசும் மக்களை புறக்கணிக்கும் விஜயகாந்த், வைகோ ஆகியோரை தெலுங்கு பேசும் மக்கள் புறக்கணிப்பதோடு, மக்களவைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வை அமோக வெற்றியடையச் செய்வோம் என்றும் திரு.கட்டபொம்மன் கந்தசாமி தெரிவித்தார்.