தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கூட்டணிக்கட்சித் தலைவர்கள், கழக நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கழக பிரச்சாரங்கள்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் தொடர்ந்து தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. M. உதயகுமாரை ஆதரித்து, திண்டுக்கல் ஒன்றியத்துக்கு உட்பட்ட உலகம்பட்டி, தாடிக்கொம்பு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அமைச்சர் திரு. நத்தம் R. விசுவநாதன் மற்றும் கழக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி கழக வேட்பாளர் டாக்டர் K. கோபாலை ஆதரித்து, நாகை நகரப் பகுதியில், அமைச்சர் திரு. R. காமராஜ், தமிழ்நாடு குடிசை பகுதி வாரிய தலைவர் திரு. கு. தங்கமுத்து மற்றும் கழக நிர்வாகிகள் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
தஞ்சை மக்களவைத் தொகுதி கழக வேட்பாளர் திரு. கு. பரசுராமனை ஆதரித்து, மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில், அமைச்சர் திரு. R. காமராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க., வேட்பாளர் திரு. ப. குமாரை ஆதரித்து, கந்தர்வக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அமைச்சர்கள் திரு. N. சுப்பிரமணியன், டாக்டர் C. விஜயபாஸ்கர், அரசு தலைமைக் கொறடா திரு. R. மனோகரன் மற்றும் கழக நிர்வாகிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மக்களவைத் தொகுதி கழக வேட்பாளர் திரு. P.R. செந்தில்நாதனை ஆதரித்து, அமைச்சர் திரு. R.B. உதயகுமார், இறையான்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட குமாரகுறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருப்பூர் மக்களவைத் தொகுதி கழக வேட்பாளர் திருமதி V. சத்தியபாமாவை ஆதரித்து, திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாரப்பாளையம், பிச்சம்பாளையம் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட பகுதிகளில் அமைச்சர் திரு. M.S.M. ஆனந்தன், மேயர் விசாலாட்சி மற்றும் கழக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திருமதி. V. சத்தியபாமாவை ஆதரித்து, அமைச்சர் திரு. தோப்பு N.D. வெங்கடாசலம், திருப்பூர் ஊத்துக்குளி ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெட்டிபாளையம், வடுகபாளையம், கொடியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
புதுச்சேரி மக்களவைத் தொகுதி கழக வேட்பாளர் திரு. M.V. ஓமலிங்கததை ஆதரித்து, அரியாங்குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி கழக வேட்பாளர் திரு. R.K. பாரதிமோகனை ஆதரித்து, கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி மக்களவைத் தொகுதி கழக வேட்பாளர் திரு. P.S. மோகனை ஆதரித்து, தருமபுரி நகராட்சி உள்ளிட்ட பகுதிகளில், தேர்தல் பொறுப்பாளர்களும் மற்றும் கழக நிர்வாகிகள், வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. J. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, கழுகுமலை, கயத்தாறு, கடம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி கழக வேட்பாளர் திரு. கு. பரசுராமனை ஆதரித்து கழக நிர்வாகிகள், தஞ்சாவூரில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மக்களவைத் தொகுதி கழக வேட்பாளர் திரு. D. ராதாகிருஷ்ணனை ஆதரித்து, சிந்தாமணி, பனையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மதுரை மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள், வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி கழக வேட்பாளர் திரு. அ.அன்வர் ராஜாவை ஆதரித்து, கழக நிர்வாகிகள், கமுதி மற்றும் பரமகுடி ஒன்றியங்களில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. P.R. சுந்தரம், எருமப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆண்டவர் நகர், ரெட்டிப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சேலம் மக்களவைத் தொகுதி கழக வேட்பாளர் திரு. V. பன்னீர்செல்வம், தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுடன், ஓமலூர், தொளசம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதி கழக வேட்பாளர் திரு. R.P. மருதராஜை ஆதரித்து, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், லால்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி கழக வேட்பாளர் திரு. M. உதயகுமார், பழனி அருகே உள்ள தொப்பம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் திருமதி. V. சத்தியபாமாவை ஆதரித்து, ஈரோடு புறநகர் மாவட்ட மாணவர் அணி மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர், கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தமிழ்நகர், வாய்க்கால்மேடு, உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று, தமிழக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை கொடுத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
நட்சத்திர பேச்சாளர்கள்
மக்களவைத் தேர்தலையொட்டி, அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து, பல்வேறு தொகுதிகளிலும் கழக நட்சத்திரப் பேச்சாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா தலைமையிலான, அ.இ.அ.தி.மு.க. அரசின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்துக்கூறி, நட்சத்திரப் பேச்சாளர்கள் வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
திருப்பூர் மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திருமதி. V. சத்தியபாமாவை ஆதரித்து, பவானி-அந்தியூர் சாலைப் பிரிவில், முன்னாள் அமைச்சர் திரு. பண்ருட்டி ராமச்சந்திரன் பிரச்சாரம் செய்தார்.
சேலம் மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. V. பன்னீர் செல்வத்தை ஆதரித்து, சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், கழக கொள்கை பரப்பு துணை பொதுச் செயலாளர் திரு. நாஞ்சில் சம்பத் வாக்கு சேகரித்தார்.
ஈரோடு மக்களவைத் தொகுதி கழக வேட்பாளர் திரு. செல்வகுமார சின்னையனை ஆதரித்து, பள்ளிபாளையத்தில், திரைப்பட நடிகை சி.ஆர். சரஸ்வதி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி கழக வேட்பாளர் திரு. கு. பரசுராமனை ஆதரித்து, நடிகர் ராமராஜன், திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.