காஞ்சிபுரம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க.வினர் இருவரின் மறைவுக்கு மக்களின் முதல்வர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல்
Oct 31 2014 11:09AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஞ்சிபுரம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க.வினர் இருவரின் மறைவுக்கு மக்களின் முதல்வரும் கழகப் பொதுச் செயலாளருமான செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குடும்ப நல நிதியுதவியாக தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
மக்களின் முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளருமான செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், காஞ்சிபுரம் மத்திய மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், வண்டலூர் ஊராட்சி, ஓட்டேரி கிளைக்கழக மேலமைப்புப் பிரதிநிதி திரு. ராஜி என்கிற எஸ். தேவேந்திரன்; பெரம்பலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி, காமராஜ் காலனியைச் சேர்ந்த திரு. ஏ. காசிநாதன் ஆகியோர் கழகப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அகால மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார். திரு. தேவேந்திரன், திரு. காசிநாதன் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு, தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டுள்ள மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா, மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், இவர்களது குடும்பத்தினருக்கு கழகத்தின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.