நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள், முன்னணிப் பேச்சாளர்கள், தோழமைக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர், பல்வேறு தொகுதிகளிலும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான கழக அரசின் மகத்தான சாதனைகளை எடுத்துக் கூறி, தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் V. பன்னீர்செல்வத்தை ஆதரித்து, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் திரு. R. சரத்குமார், சேலம் மாநகர பகுதியில் பட்டை கோவில், தாதாகபட்டி, சூரமங்கலம், இரும்பாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
கடலூர் மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. அ. அருண்மொழிதேவனை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் திரு. பண்ருட்டி ராமச்சந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. R. பார்த்திபனை ஆதரித்து கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் திரு.உ.தனியரசு, சோழவந்தான், வாடிப்பட்டி, பாலமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி கழக வேட்பாளர் திரு. C. மகேந்திரனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், கொங்குநாடு முன்னேற்றக்கழகத் தலைவர் திரு. பெஸ்ட் ராமசாமி கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.
ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி கழக வேட்பாளர் திரு. K.N. ராமச்சந்திரனை ஆதரித்து, மாங்காட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் திரு. பூவை ஜெகன்மூர்த்தி கலந்து கொண்டு ஆதரவு திரட்டினார்.
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சேதுராமன், விருதுநகர் மக்களவைத் தொகுதி கழக வேட்பாளர் திரு. D. ராதாகிருஷ்ணனை ஆதரித்து, சித்தாளை பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
திருச்சி மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. ப. குமாரை ஆதரித்து, மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. ஸ்ரீதர் வாண்டையார் திருவெறும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி கழக வேட்பாளர் திருமதி. மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக தமிழ்மாநில முஸ்லிம் லீக் தலைவர் திரு. ஷேக்தாவூத், திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட கேளம்பாக்கம், கோவளம், திருப்போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டார்.
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் K. கோபாலை ஆதரித்து, தமிழக படையாட்சியார் பேரவையின் மாநிலத் தலைவர் டாக்டர். எஸ்.எஸ்.ஆர். ராமதாஸ், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தேனி தொகுதியில் கழக வேட்பாளர் திரு. R. பார்த்திபனை ஆதரித்து, 24 மனை தெலுங்கு செட்டியார் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ஜெகன்நாத் மிஸ்ரா, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், நாடு தற்போது சந்திக்கும் பிரச்னைகளை துணிச்சலுடன் எதிர்கொண்டு செயலாற்றும் ஒரே தலைவர் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா என்றும், தமிழகம்-புதுச்சேரியில், 40 தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க. அமோக வெற்றிபெறுவது உறுதியாகிவிட்டது என்றும் தெரிவித்தார்.
நட்சத்திரப் பிரச்சாரம்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து, பல்வேறு தொகுதிகளிலும் கழக நட்சத்திரப் பேச்சாளர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துரைத்து, அவர்கள் மேற்கொண்டு வரும் பிரச்சாரம், பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
கழகப் பிரச்சாரம்
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 மக்களவைத் தொகுதிகளிலும், அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும், வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு பொதுமக்களிடம், ஆதரவு திரட்டி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் திருமதி மரகதம் குமரவேலை ஆதரித்து, காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் அ.இ.அ.தி.மு.க.வினர், அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி வாக்கு சேகரித்தனர்.
திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடியில், கழக வேட்பாளர் டாக்டர் P. வேணுகோபாலை ஆதரித்து, தொழிலாளர்களிடம் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியின் கழக வேட்பாளர் திரு. கோ. அரியை ஆதரித்து, சோளிங்கர் பேரூராட்சியின் பல இடங்களிலும், அ.இ.அ.தி.மு.க.வினர் தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.
வேலூர் தொகுதி கழக வேட்பாளர் திரு. பா. செங்குட்டுவன் உள்ளிட்டோர் மருதவல்லிப்பாளையம், வல்லண்டராமம் உட்பட பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு, அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
கோவை மக்களவைத் தொகுதியின், அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. A.P.நாகராஜனுக்கு ஆதரவாக, பல்வேறு இடங்களில் அ.இ.அ.தி.மு.க.வினர் இருசக்கர வாகனங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியின், கழக வேட்பாளர் திருமதி. வி. சத்தியபாமாவை ஆதரித்து, பட்டம்பாளையம், சொக்கனூர், வெங்கமேடு உட்பட பல்வேறு இடங்களில் அ.இ.அ.தி.மு.க.வினர் இருசக்கர வாகனங்களில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர்.
மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனுப்பானடி, சவுராஷ்ட்ரபுரம் உட்பட பல்வேறு இடங்களில் கழக வேட்பாளர் திரு. இரா. கோபாலகிருஷ்ணனை ஆதரித்து, கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட தனக்கன்குளம், வலையன்குளம், நெடுங்குளம் உள்ளிட்ட இடங்களில் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. D. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக, கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் பொதுமக்களை சந்தித்து, அரசின் சாதனைகள் இடம்பெற்ற துண்டுப்பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனர்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதி கழக வேட்பாளர் திரு. எம்.உதயகுமாரை ஆதரித்து, ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர்.
திருச்சி மக்களவைத் தொகுதியில், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நாவலூர், குட்டப்பட்டு, இனாம்குளத்தூர் உட்பட பல்வேறு கிராமங்களில், அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. ப.குமாருக்கு ஆதரவாக, ஏராளமான கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் கழக வேட்பாளர் திரு. மா.சந்திரகாசியை ஆதரித்து, செந்துறை ஒன்றியத்துக்கு உட்பட்ட பொன்பரப்பி, ஆர்.எஸ்.மாத்தூர், தளவாய் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் பொதுமக்களை சந்தித்து, அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரித்தனர்.
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கே. கோபாலுக்கு ஆதரவாக, கீழையூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
மேலும், திருவாரூர் மாவட்டத்தின் கூத்தநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களிலும், நாகப்பட்டினம் தொகுதியின் கழக வேட்பாளர் டாக்டர் கே. கோபாலை ஆதரித்து, அ.இ.அ.தி.மு.க.வினர் வாக்கு சேகரித்தனர்.
மயிலாடுதுறை தொகுதி கழக வேட்பாளர் திரு. ஆர்.கே. பாரதிமோகனை ஆதரித்து, இந்திய முக்குலத்தோர் பாசறை நிறுவனத் தலைவர் திரு. சிற்றரசு தேவர், மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
நீலகிரி மக்களவைத் தொகுதி கழக வேட்பாளர் டாக்டர் சி.கோபாலகிருஷ்ணனுக்கு ஆதரவாக, பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் கடம்பூர் மலைப்பகுதி மற்றும் புஞ்சை புளியம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் அ.இ.அ.தி.மு.க.வினர் தீவிர பிரச்சாரம் செய்தனர்.
இதேபோல், புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் கழக வேட்பாளர் திரு. எம்.வி. ஓமலிங்கத்தை ஆதரித்து, மணவெளி சட்டமன்றத் தொகுதியின் பல்வேறு இடங்களில் நேற்று, அ.இ.அ.தி.மு.க.வினர் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.