ஓசூர் அடுத்த கெலமங்கலமத்தில் 1200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஒரு இடத்தில் வளைகாப்பு
Jan 29 2023 5:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலமங்கலமத்தில் ஒரே இடத்தில் ஆயிரத்து 200 தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கெலமங்கலம் வட்டார சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட 6 சுகாதார நிலையத்திலிருந்து அழைத்துவரப்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு புடவை, கண்ணாடி, வளையல்கள், மஞ்சள், குங்குமம் மற்றும் ஐந்து வகையான உணவுகள் ஆகியவை வழங்கப்பட்டன.