பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் : தி.மு.க., இடதுசாரிகள், ம.தி.மு.க., வி.சி.க. கட்சிகள் பங்கேற்பு
Sep 20 2021 1:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், புதிய வேளாண் சட்டங்கள், பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தி.மு.க. இடதுசாரிகள், வி.சி.க. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன.
சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள தனது இல்லம் அருகே தி.மு.க. எம்.பி. கனிமொழி, கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பங்கேற்றார். இதேபோல், திருச்சி, சேலம், கரூர், அரியலூர், தூத்துக்குடி, திருவள்ளூர், ஈரோடு, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க., இடதுசாரிகள், ம.தி.மு.க., வி.சி.க. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. பெட்ரோல், டீசல் விலையை கண்டித்தும், புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் அவர்கள் முழக்கமிட்டனர்.