அன்பு காட்டி, பிறருக்கு உதவி புரிந்து, சகோதரத்துவத்துடன் வாழ்ந்திட வேண்டும் என்ற நபிகள் நாயகத்தின் போதனைகளை மனதில் கொள்ள உறுதியேற்போம் என முதலமைச்சர் ஜெயலலிதா ரம்ஜான் வாழ்த்து

Jul 29 2014 3:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான புனித ரம்ஜான், இன்று நாடு முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இந்த ஈகைத் திருநாளை இன்பமுடன் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும், முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, தமது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா வெளியிட்டுள்ள ரம்ஜான் திருநாள் வாழ்த்துச் செய்தியில், ஈகைத் திருநாளை இன்பமுடன் கொண்டாடும் தமது அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தமது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். ரமலான் மாதத்தின் முப்பது நாட்களும் இஸ்லாமியப் பெருமக்கள் நோன்பிருந்து, ஏழைகளின் பசித் துன்பத்தை தாமும் அனுபவித்து, ஏழை எளியோருக்கு உணவு அளித்து, எல்லோரும் எல்லா நலமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட இறைவனைத் தொழுது, ரம்ஜான் பண்டிகையை சிறப்புடன் கொண்டாடி மகிழ்வார்கள் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியப் பெருமக்களின் நலனில் அக்கறை கொண்ட உங்கள் அன்புச் சகோதரியின் அரசு, புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழகம் முழுவதும் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களுக்கு 4,500 மெட்ரிக் டன் அரிசி வழங்கி வருவதையும்; பள்ளிவாசல்கள், தர்காக்கள் போன்ற வக்ஃப் நிறுவனங்களின் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக புதிதாக வக்ஃப் நிறுவன மேம்பாட்டு நிதி உருவாக்கப்பட்டு, 3 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதையும்; உலமாக்களின் மாதாந்திர ஓய்வூதியத்தினை 1,000 ரூபாயாக உயர்த்தியும்; தமிழ்நாடு வக்ஃப் வாரியத்திற்கு வழங்கப்படும் ஆண்டு நிருவாக மானியத்தை 1 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கியுள்ளதையும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் நன்கு அறிவர் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். அனைவரிடத்திலும் அன்பு காட்டுங்கள், பிறருக்கு உதவி புரியுங்கள், சகோதரத்துவத்துடன் வாழ்ந்திடுங்கள் என்ற, நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை மனதில் கொண்டு வாழ்ந்திட உறுதியேற்போம் என்று கூறி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தமது ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்வதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00