ஸ்டெர்லைட் துப்பாக்‍கிச்சூடு சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் நடத்திய விசாரணை அறிக்‍கை தாக்‍கல் - விவரங்களை உடனடியாக இணையதளத்தில வெளியிட ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் வலியுறுத்தல்

May 19 2022 3:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையை மக்கள் பார்வைக்கு உடனடியாக வெளியிட வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தூத்துக்குடியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தன்னெழுச்சி போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது.

சுமார் 4 ஆண்டுகளாக விசாரணை நடத்திய இந்த ஆணையம் நேற்று தனது அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. இந்நிலையில் ஒரு நபர் ஆணையத்தின், விசாரணை அறிக்கையை தமிழக அரசு உடனடியாக பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00