அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார் எதியோப்பிய பிரதமர் : பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆரவாரத்துடன் வாழ்த்து
Dec 11 2019 10:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எதியோப்பியா பிரதமர் Abiy Ahmed-க்கு அமைதிக்கான நோபல் பரிசு, நேற்று வழங்கப்பட்டது.
இலக்கியம், இயற்பியல், வேதியல், மருத்துவம், பொருளாதாரம், உலக அமைதி போன்ற துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு, உயரிய விருதான நோபல் பரிசு ஒவ்வெரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, கிழக்கு ஆப்பிரிக்க நாடான எதியோப்பிய பிரதமர் Abiy Ahmed அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஐரோப்பிய நாடான நார்வே தலைநகர் ஓஸ்லோவில், நேற்று நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில், அமைதிக்காக வழங்கப்படும் 100-ஆவது நோபல் பரிசை, Abiy Ahmed-க்கு, நோபல் பரிசுக் குழுவின் தலைவா் பெரிட் ரைஸ் ஆண்டா்சன் வழங்கி கவுரவித்தார்.
அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற Abiy Ahmed-க்கு, பல்லாயிரக்கணக்கான மக்கள், ஆரவாரத்துடன் வாழ்த்துகளை தெரிவித்தனர். அவர்களின் வாழ்த்துகளை, தலைவணங்கி Abiy Ahmed நெகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.