அமெரிக்காவில் நியூஜெர்சியில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு - காவல்துறை அதிகாரி உட்பட 6 பேர் பலி
Dec 11 2019 1:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமெரிக்காவின் நியூஜெர்சியில் இரு இடங்களில் நிகழ்ந்தப்பட்ட துப்பாக்கிச்சூடுகளில் காவல்துறை அதிகாரி உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது. இதில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வரும் கொடூரச் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. நியூஜெர்சி நகரின் செமின்ட்ரி பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அதிகாரி ஒருவர் பலியானார். அதே பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நடைபெற்ற மற்றொரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய 2 பேரையும் காவல் துறையினர் சுட்டுக்கொன்றனர். இது, பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என கருதப்படுவதால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.