சிரிய அரசுப்படைகள், ரஷ்ய ராணுவம் விமான தாக்குதல் : 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Dec 8 2019 4:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிரியாவில் புரட்சியாளர் வசம் உள்ள Idlib பகுதியில், சிரிய அரசுப்படைகளும், ரஷ்ய ராணுவமும் நடத்திய விமான தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

சிரியாவில் அரசுப்படைகளுக்கும், புரட்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. சிரியா அரசுக்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில், சிரியாவின் வடமேற்கில் அமைந்துள்ள Idlib பகுதியில் சிரிய அரசு படைகளும், ரஷ்ய ராணுவமும் நேற்று விமானத்தாக்குதல் நடத்தின. இதில் 5 கிராமங்கள் பெரும் சேதமடைந்தன. Balyoun கிராமத்தில் உள்ள மார்க்கெட் மீது ரஷ்ய போர் விமானம் நடத்திய தாக்குதலில் 9 பேரும், al-Bara கிராமத்தில் நடந்த தாக்குதலில் 4 பேரும் கொல்லப்பட்டதாக மனித உரிமை பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், Abdita கிராமத்தின் மீது சிரிய ராணுவ ஹெலிகாப்டர் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததாகவும், இதேபோன்று, Jebghas மற்றும் Tel Minis ஆகிய கிராமங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேரும் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுதவிர விமான தாக்குதலில் 8 குழந்தைகளும் பலியாகி இருப்பதாக மனித உரிமை பார்வையாளர்கள் தெரிவித்தனர். ஆனால் இந்த தாக்குதல் குறித்து சிரியாவின் ஊடகங்கள் செய்தி எதுவும் வெளியிடவில்லை.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00