சூடான் நாட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்களில் ஒருவர், நாகை மாவட்டத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் : உடலை மீட்டு இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை
Dec 5 2019 2:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சூடான் நாட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்களில் ஒருவர் நாகையை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
ஆப்பரிக்க நாடான சூடான் தலைநகர் கார்டோவின் பாஹ்ரி பகுதியில் சலூமி என்ற செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 18 பேர் இந்தியர்கள் என்றும், அதில் மூன்றுபேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் உயிரிழந்த 3 தமிழர்களில் ஒருவர் நாகப்பட்டினம் மாவட்டம் ஆலங்குடிச்சேரி கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பது தெரியவந்துள்ளது. பொறியியல் படிப்பு முடித்துவிட்டு குடும்ப சூழல் காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சூடான் நாட்டின் டைல்ஸ் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் உயிரிழந்த ராமகிருஷ்ணனின் உடலை, அவரது பெற்றோர் மீட்டு சொந்த ஊர் கொண்டுவர அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர், மேலும் , சடலத்தை பெற்றுத்தர இந்திய தூதரகம் உதவி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.