பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய கம்முரி புயலால் வீடுகள், மின்கம்பங்கள், மரங்கள் சேதம் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு
Dec 4 2019 9:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய கம்முரி புயலுக்கு, பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
பிலிப்பைன்சின் தெற்கு பகுதியை நேற்று தாக்கிய கம்முரி புயல், பின்னர் தென்சீனக் கடல் நோக்கி சென்றது. அப்போது மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்துக்கு வீசிய காற்றில், ஏராளமான வீடுகளின்
மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன், மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீடுகளை சரி செய்யும் பணியிலும், சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்கள், மரங்களை அப்புறப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.