சூடான் நாட்டு செராமிக் தொழிற்சாலையில் கேஸ் டேங்கர் வெடித்து பயங்கர தீ விபத்து- தீயில் கருகி உயிரிழந்த 23 பேரில் 18 பேர் இந்தியர்கள்
Dec 4 2019 8:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சூடானில் செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 18 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
சூடான் தலைநகர் கார்டோமில் உள்ள செராமிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்தில் ஏற்பட்டது. ஆலையில் இருந்த கேஸ் டேங்கர் வெடித்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், தொழிற்சாலையில் இருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவர்களில் 18 பேர் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் தமிழர்கள் சிலரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்த இந்தியர்களுக்கு, வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், சம்பவ இடத்து இந்திய தூதரக அதிகாரிகள் விரைந்துள்ளதாகவும், விபத்து குறித்து தகவல் அறிய தூதரக அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆலையில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் இந்த விபத்து நடந்துள்ளதாக சூடான் அரசு தெரிவித்துள்ளது.