அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டிருக்கும் வடகொரியாவின் கனவு நகரம் - பிரம்மாண்ட தொடக்க விழா நிகழ்ச்சியில் அதிபர் கிம் ஜோங் உன் பங்கேற்பு
Dec 4 2019 1:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வடகொரியாவின் கனவு நகரத்தை, அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன், ஆரம்ப காலத்தில் தனது குடும்பத்தினர் வாழ்ந்த பூர்வீக பகுதியான வடக்கு மாகாணத்தில், பல்வேறு வசதிகளுடன் கூடிய நவீன சொகுசு நகரம் ஒன்றை கட்ட திட்டமிட்டிருந்தார். நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் காரணமாக கட்டுமான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட போதிலும், தாமதமாகவே இந்த நகரம் கட்டி முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று நவீன நகரத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதனையொட்டி நடைபெற்ற ராணுவ வீரர்களின் அணிவகுப்பு, பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது.
பல்வேறு சொகுசு வசதிகளுடன் அமைந்துள்ள இந்த நகரத்துக்கு 'சம்ஜியோன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள், நட்சத்திர ஓட்டல்கள், சொகுசு விடுதிகள், கலாசார மையம் மற்றும் உயர்தர மருத்துவமனைகள் என அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய இந்த நகரத்தில், 4 ஆயிரம் குடும்பங்கள் வசிக்க முடியும். நவீன நாகரிகத்தின் வடிவமாக இந்நகரம் திகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.