உலக அளவில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு விஷமிகளின் மின்னஞ்சல் ஊடுருவல் குறித்து, கூகுல் நிறுவனம் எச்சரிக்கை
Nov 29 2019 12:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக அளவில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு விஷமிகளின் மின்னஞ்சல் ஊடுருவல் குறித்து, கூகுல் நிறுவனம் எச்சரிக்கை தகவலை அனுப்பி இருக்கிறது.
வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி உளவு பார்க்கப்படுவதாக செய்தி வெளியான நிலையில், உலக அளவில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு, விஷமிகளின் மின்னஞ்சல் ஊடுருவல் குறித்து கூகுள் நிறுவனம் எச்சரிக்கை தகவலை அனுப்பி இருக்கிறது. இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 500 பேருக்கு இந்த எச்சரிக்கை தகவல் வந்துள்ளதாகவும், அமெரிக்கா, கனடா, ஆப்கானிஸ்தான், தென்கொரியா போன்ற நாடுகளில், ஆயிரத்துக்கும் மேலனோர் எச்சரிக்கை தகவலை பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தில் இருந்து அனுப்புவது போலவே வாடிக்கையாளர்களுக்கு மர்ம நபர்கள்மின்னஞ்சல் அனுப்புவதாகவும், அதில் கடவுச்சொல் பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றனர். அவ்வாறு வாடிக்கையாளர்கள் கடவுச்சொல்லை பயன்படுத்தினால், உடனே ஊடுருவி அவர்களின் முக்கிய தகவல்களை திருடிவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்கும் விதமாக பிரத்யேகமாக "உயர் பாதுகாப்பு திட்டம்" ஒன்றை கூகுள் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. அதில் இணையுமாறு வாடிக்கையாளர்களை கூகுள் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. இதன்மூலம் வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல் கணக்குகள் தகுந்த முறையில் பாதுகாக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.