சாலை விபத்துகளை தடுக்க புது யுக்தி : முப்பரிமாண நடைபாதைகள் தாய்லாந்தில் அறிமுகம்
Nov 28 2019 3:23PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சாலை விபத்துகளை குறைப்பதற்காக, தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முப்பரிமான பாதசாரிகள் நடைபாதை, பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
தாய்லாந்தில் கடந்த 4 ஆண்டுகளாகவே சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பாதசாரிகள் நடைபாதைகளில் 10 ஆயிரத்து 672 விபத்துகள் பதிவாகியுள்ளன. இவ்விபத்துகளை குறைக்க, முப்பரிமாண நடைபாதைகளை தாய்லாந்து அரசு அறிமுகம் செய்துள்ளது. மாணவர்களும், தன்னார்வலர்களும் இணைந்து, முப்பரிமாண பாதசாரிகளுக்கான நடைபாதையை ஏற்படுத்தியுள்ளனர். இதன் மூலம், விபத்துகள் குறையும் பட்சத்தில், இத்திட்டத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.