இலங்கை பிரதமராகிறார் முன்னாள் அதிபர் மஹிந்தராஜபக்ச - ரணில் விக்கிரமசிங்கே ராஜினாமாவைத் தொடர்ந்து அறிவிப்பு
Nov 20 2019 7:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கையின் புதிய பிரதமராக, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை நியமித்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.
அண்டை நாடான இலங்கையில், அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், பொதுஜன பெரமுனா கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர், கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றதையடுத்து, புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்டார். இதனால் அதிருப்தியடைந்த இலங்கை பிரதமர் விக்ரமசிங்கே, தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும், ராஜினாமா கடிதத்தை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுப்பினார். இந்நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை நியமனம் செய்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிய பிரதமராக, மகிந்த ராஜபக்சே விரைவில் பதவியேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.