விக்கி லீக்ஸ் அதிபர் மீதான பாலியல் வழக்கு : ரத்து செய்யப்படுவதாக ஸ்வீடன் அரசு அறிவிப்பு
Nov 19 2019 9:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விக்கி லீக்ஸ் அதிபர் மீதான பாலியல் வழக்கு கைவிடப்படுவதாக ஸ்வீடன் அரசு தெரிவித்துள்ளது.
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ரகசியங்களை இணைய தளங்களில் வெளியிட்டு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியவர். பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்ட அசாஞ்சேவை கைது செய்ய அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வந்தது. இதனிடையே, கடந்த 2010-ம் ஆண்டு இரு ஸ்வீடன் பெண்கள், அசாஞ்சே மீது பாலியல் புகார் அளித்தனர். இந்த வழக்குகளில் கைதாவதிலிருந்து தப்பிக்க, அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார். கடந்த ஏப்ரல் மாதம் பிரிட்டன் போலீசாரால் கைது செய்யப்பட்ட அசாஞ்ஜே, தற்போது பிரிட்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது, அசாஞ்சே மீதான பாலியல் புகாரை கைவிடுவதாக, ஸ்வீடன் அரசின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.