இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச - முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்பு
Nov 18 2019 6:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கையின் 8-வது அதிபராக கோத்தபய ராஜபக்ச இன்று பதவியேற்றார்.
இலங்கையில், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. பொதுஜன பெரமுனா கட்சி சார்பில், மஹிந்தா ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவுக்கும், ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில், முன்னாள் அதிபர் பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே இந்தத் தேர்தலில் கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே முன்னிலையில் இருந்த கோத்தபய ராஜபக்சே, 13 லட்சத்து 60 ஆயிரத்து 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக, அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்நிலையில், இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே இன்று பதவியேற்றார்.