வெளிநாடு சென்று சிகிச்சை பெற நவாஸ் ஷெரீபுக்கு அனுமதி : லாகூர் உயர் நீதிமன்றம் உத்தரவு
Nov 17 2019 12:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், வெளிநாடு சென்று சிகிச்சை பெற லாகூர் உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
ஊழல் வழக்குகளில் கைதாகி சிறையில் இருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து வெளிநாடு சென்று சிகிச்சை பெற பாகிஸ்தான் அரசிடம் அவர் அனுமதி கோரினார். ஆனால், இதற்கு, இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது.
இதனால் அவர் வெளிநாடு செல்வதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வந்தது. இதனையடுத்து, லாகூர் உயர் நீதிமன்றத்தில் நவாஸின் சகோதரர் ஷாபாஸ் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த லாகூர் உயர் நீதிமன்றம், நவாஸ் ஷெரீப், வெளிநாடு சென்று 4 வாரம் சிகிச்சை பெற அனுமதி வழங்கியது. மேலும், பாகிஸ்தான் அரசின் நிபந்தனைகளை தள்ளுபடி செய்தும், தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்து நவாஸின் பெயரை நீக்கும்படியும் உத்தரவிட்டது.