இலங்கையில் இஸ்லாமிய மக்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு : வாக்குப்பதிவை சீர்குலைக்கும் முயற்சி என குற்றச்சாட்டு
Nov 16 2019 3:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கை புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு வாக்களிக்க சென்றபோது, இஸ்லாமிய மக்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
அனுராதபுரம் தந்திரிமலைப் பகுதியில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. யுத்தக் காலத்தில் வவுனியா பகுதியில் இருந்து, புத்தளத்திற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும் இஸ்லாமியர் அப்பேருந்தில் பயணம் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். செட்டிக்குளத்திலுள்ள வாக்குச்சாவடிக்கு
அவர்களை அழைத்து சென்றபோது இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. மன்னார் நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் மரங்களை சாலையின் குறுக்கே போட்டு பேருந்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். கல்வீச்சு தாக்குதல் நடத்திய பின்னரே, துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தந்திரிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.