ஆபாசம் மற்றும் தவறான தகவல்களை வெளியிட்ட 540 கோடி போலி ஃபேஸ்புக் கணக்குகள் - உடனடியாக நீக்கி ஃபேஸ்புக் நிறுவனம் அதிரடி
Nov 14 2019 5:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆபாசம் மற்றும் தவறான தகவல்களை வெளியிட்ட 5.4 பில்லியன் போலி கணக்குகளை நீக்கி ஃபேஸ்புக் நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், ஒவ்வொரு ஆண்டும் போலி கணக்குகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. ஆபாசமான மற்றும் தவறான தகவல்களை பதிவிடும் கணக்குகள், சமூக வலைதள பாதுகாப்பின் அடிப்படையில் நீக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 5.4 பில்லியன் ஃபேஸ்புக் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. ஆனால் நீக்கப்பட்ட அடுத்த நிமிடமே புதிய கணக்குகள் உருவாக்கப்படுவதாகவும், அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் கணக்குகள் குறித்து அதிக விபரங்களை கேட்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா, ஐரோப்பா, ஜெர்மனி, ஃபிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.