வரும் 16-ம் தேதி நடைபெறவுள்ள இலங்கை அதிபர் தேர்தல் - இன்றுடன் பிரசாரம் ஓய்வதால், இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள்
Nov 13 2019 2:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இலங்கை அதிபர் தேர்தல் வரும் 16-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைவதால் அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை அதிபர் தேர்தல் வரும் 16-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஒரு கோடியே 60 லட்சம் வாக்காளர்களில் 16 லட்சம் பேர் முதன்முறையாக வாக்களிக்க உள்ள நிலையில், அவர்களின் வாக்குகளை பெற சஜித் பிரேமதாசா தீவிர முனைப்பு காட்டி வருகிறார். தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைவதால் அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிபர் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிடும் கோத்தபய ராஜபக்சேவுக்கும், ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. கோத்பய ராஜபக்சே மற்றும் சஜித் பிரேமதாசா இருவருமே அரசியல் பின்புலம் உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்றாலும், இருவரது அணுகுமுறையும் வேறுவிதமாக உள்ளது.