பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற அரசு முன்னுரிமை வழங்கும் - இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அறிவிப்பு
Oct 15 2019 12:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதற்கு அரசு எப்போதுமே முன்னுரிமை வழங்கும் என ராணி இரண்டாம் எலிசபெத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் பிரெக்ஸிட் நடவடிக்கைக்கான காலக்கெடு வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது. பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை இங்கிலாந்து எம்.பி.க்கள் தொடர்ந்து நிராகரித்து வருவதால் ஒப்பந்தமில்லா பிரெக்ஸிட்-டுக்கு வாய்ப்பு அதிகமாகி உள்ளது. இந்தநிலையில் ராணி இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது திட்டமிட்டபடி 31-ந்தேதிக்குள் பிரெக்ஸிட்டை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு அரசு எப்போதுமே முன்னுரிமை அளிக்கும் என கூறினார்.