சிரிய எல்லைக்குள் நுழைந்து துருக்கி ராணுவம் தாக்குதல் : பொருளாதார தடை விதிக்கப் போவதாக அமெரிக்கா எச்சரிக்கை

Oct 13 2019 1:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

துருக்கி படைகள் சிரிய எல்லைக்குள் நுழைந்து தீவிர தாக்குதல் நடத்தி வருவதால், மத்திய கிழக்கு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிரியாவில் குர்திஷ் படையினருக்கு ஆதரவாக செயல்பட்ட அமெரிக்க துருப்புகள், கடந்த வாரம் விலக்கிக் கொள்ளப்பட்டன. இதனையடுத்து, திடீரென சிரிய எல்லைக்குள் அண்டை நாடான துருக்கி படைகள் நுழைந்து குர்திஷ் போராளிகளுக்கு ஆதரவாக தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.

ரஸ் அல்-அயின் பகுதியில் சிரியாவின் பீரங்கி தாக்குதலில் பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துருக்கியின் இந்த திடீர் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்துள்ளன. துருக்கி மீது பொருளாதார தடைகள் விதிக்கப்போவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. எனினும் சிரிய அகதிகளின் பாதுகாப்பு கருதியே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக துருக்கி விளக்கமளித்துள்ளது.

இந்நிலையில், துருக்கி நாட்டிற்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யப்போவதில்லை என்று பிரான்ஸ் நாட்டு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00