2019ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு - அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்காக எத்தியோப்பிய பிரதமர் அபே அகமது அலிக்கு அறிவிப்பு
Oct 11 2019 4:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2019ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமர் அபே அகமது அலிக்கு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள், ஸ்வீடன் தலைநகர் Stockhome-ல் கடந்த 7-ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
எத்தியோப்பிய பிரதமர் அபே அகமது அலி, இந்த ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசை பெற உள்ளார். அண்டை நாடான எரித்திரியாவுடன், எல்லைப் பிரச்னையை தீர்க்க, அமைதியான முறையில் தீர்க்கமான நடவடிக்கைகள் எடுத்ததற்காக, அவர், அமைதி நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.