சவுத்ரி சர்க்கரை ஆலை மோசடி வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கைது -அதிரடியாக கைது செய்தது என்.ஏ.பி.
Oct 11 2019 6:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை, சவுத்ரி சர்க்கரை ஆலை மோசடி வழக்கில் அந்நாட்டு ஊழல் தடுப்பு அமைப்பான என்.ஏ.பி. கைது செய்துள்ளது.
சவுத்ரி சர்க்கரை ஆலையின் பங்குகளை சட்ட விரோதமாக வாங்கியதில், நவாஸ் ஷெரிப்பின் மகள் மரியம், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில், நவாஸ் ஷெரிப்பையும் விசாரிக்க வேண்டுமென அந்நாட்டு ஊழல் தடுப்பு அமைப்பான என்.ஏ.பி. கேட்டுக்கொண்டதையடுத்து, என்.ஏ.பி. நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. அல்-அசிசியா இரும்பு ஆலையில் நடைபெற்ற மோசடி தொடர்பான வழக்கில், ஏற்கனவே 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நவாஸ் ஷெரிப்பை, என்.ஏ.பி. போலீசார் இன்று கைது செய்தனர். அவரை 15 நாள் காவலில் எடுக்க என்.ஏ.பி. போலீசார் திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.