ஈக்வடாரில் எரிபொருள் மானியம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருவாரமாக தொடரும் போராட்டம் - அதிபர் மெரினோ பதவி விலக வலியுறுத்தல்
Oct 10 2019 5:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈக்வடாரில், எரிபொருள் மானியம் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
சர்வதேச நாணய நிதியத்திலிருந்து பெற்ற 300 கோடி ரூபாய் கடனை ஈடு செய்ய, எரிபொருள் மானியத்தை ரத்து செய்வதாக, ஈக்வடார் அதிபர் லெனின் மெரினோ, ஒரு வாரத்திற்கு முன்பு அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதிபர் லெனின் மெரினோ பதவி விலகக்கோரியும், நாடு முழுவதும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அதிபர் மெரினோ பஹ்டவி விலக மறுத்ததையடுத்து, கியூடோ, கலோனல் உள்ளிட்ட மாவட்டங்களில் போராட்டம் தீவிரமடைந்தது. போலீசார் மீது கற்களை வீசி போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதால், கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல்துறையினர் அவர்களை கலைத்தனர்.