உலக அளவில் 220 கோடி மக்கள், பார்வை குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்
Oct 9 2019 4:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக அளவில் 220 கோடி மக்கள், பார்வை குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் சார்பாக, உலகம் முழுவதும், கண் பார்வை தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, உலக அளவில் 220 கோடி பேர் பார்வை குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கை முறை மாற்றம், முதியவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, போதிய மருத்துவ வசதிகள் இல்லாமை ஆகியவையே இதற்கு காரணம் என உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
பார்வை குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள 220 கோடி மக்களில், 100 கோடி பேர், தங்கள் பாதிப்பை தவிர்க்க முடியும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி மற்றும் மொபைல் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பதே, பார்வை குறைபாட்டிற்கு முக்கிய காரணம் என ஆதாரங்களுடன் கண்டறியப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிப்புற நடமாட்டம் இல்லாமல், வீடு அல்லது மூடிய அறைக்குள் இருப்பதும், பார்வை குறைபாடுக்கு காரணமாக அமைகிறது என உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.