தாய்லாந்து அருவியில் தவறி விழுந்து மேலும் 5 யானைகள் பலி : ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்
Oct 9 2019 4:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தாய்லாந்து அருவியில் தவறி விழுந்து 6 யானைகள் உயிரிழந்த செய்தி விலங்கியல் ஆர்வலர்களை கவலையடைய செய்துள்ள நிலையில், அந்த இடத்தில் ஏற்கனவே 5 யானைகள் உயிரிழந்து இருப்பது மீட்பு நடவடிக்கையின் போது தெரியவந்துள்ளது.
தாய்லாந்தின் நக்கோன் நாயக் மாகாணத்தில் காவோ யாய் எனும் உயிரியல் பூங்கா உள்ளது. கடந்த சனிக்கிழமை இங்குள்ள அருவியில் குட்டி யானை ஒன்று தவறி விழுந்தது. அக்குட்டியானையை காப்பாற்றும் முயற்சியில் அடுத்தடுத்து 5 யானைகள் அருவியில் இருந்து விழுந்தன. இந்த சம்பவத்தில் குட்டியானை உள்பட 6 யானைகள் பாறைகளில் மோதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஏற்கெனவே அந்த இடத்தில் 5 யானைகள் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது. உயிரியல் பூங்காவில் ட்ரோன் மூலம் ஆய்வு செய்யப்பட்டபோது இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.