கடுமையான நிதி நெருக்கடி காரணமாக நிலுவை நிதியை உறுப்பு நாடுகள் வழங்க வேண்டும் - ஐ.நா பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை
Oct 9 2019 4:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடுமையான நிதி நெருக்கடியை ஐ.நா. எதிர் கொண்டுள்ளதாகவும், ஊழியா்களுக்கு அடுத்த மாதம் ஊதியம் அளிப்பதற்கு போதுமான நிதி இல்லை என்றும் அதன் பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.
ஐ.நா.வின் நிர்வாகம் மற்றும் பட்ஜெட் விவகாரங்கள் தொடா்பாக ஆலோசிக்கும் 5-ஆவது குழுவின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய அன்டோனியோ குட்டெரெஸ், ஐ.நா. கடுமையான நிதியை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் ஐ.நா.வின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத நிதி நெருக்கடி தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் நிதி இல்லாவிட்டால், திட்டங்களை முறையாக செயல்படுத்த முடியாது என அவர் கூறினார். எனவே, பட்ஜெட் நடவடிக்கைகளுக்கான நிலுவை நிதியை உறுப்பு நாடுகள் உரிய காலத்துக்குள் வழங்க வேண்டும் எனவும் அன்டோனியோ வலியுறுத்தி உள்ளார்.