இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிப்பு - பிரபஞ்சம் தொடர்பான ஆராய்ச்சிக்காக கிடைத்த கவுரவம்
Oct 8 2019 5:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
2019ம் ஆண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி பொருளாதாரம் ஆகிய ஆறு துறைகளில் சாதனை புரிவோருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இயற்பியல் துறையினருக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டவியல் தொடர்பான தத்துவார்த்த கண்டுபிடிப்பிற்காக அமெரிக்க கனெடிய இயற்பியல் அறிஞரான ஜேம்ஸ் பீபிள்ஸ் மற்றும் சூரியனை போன்ற நட்சத்திரத்தை சுற்றி வரும் கோள்களை கண்டுபிடித்த மைக்கேல் மேயர், தீதியர் கியூலோஸ் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.