காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் ஆதரவு - பயங்கரவாதத்தை கைவிடும்படி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை
Sep 18 2019 5:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு - காஷ்மீர் மாநில விவகாரத்தில், நேரடி பேச்சுவார்த்தை மூலம், இந்தியாவும் பாகிஸ்தானும் சுமுக தீர்வு காண வேண்டும் என்றும், பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கைவிட வேண்டும் என்றும் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு, பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இன்று, ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் கூடியது. அப்போது, ஜம்மு - காஷ்மீர் மாநில விவகாரத்தில், நேரடி பேச்சுவார்த்தை மூலம், இந்தியாவும் பாகிஸ்தானும் சுமுக தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் பேசிய இத்தாலி நாட்டு உறுப்பினர் ஃபுல்வியோ மார்டூசியெல்லோ, அணு ஆயுதங்களை பயன்படுத்தப் போவதாக, பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது என்றும், அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்களை தடுக்காமல், ஐரோப்பியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
உலகில் சிறந்த ஜனநாயக நாடாக, இந்தியா விளங்குவதாக பேசிய, போலாந்து உறுப்பினர் ரைஸ்ஸார்ட் ஸார்னெக்கி, காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறும் பயங்கரவாத தாக்குதலை கவனிக்க வேண்டும் என்றும், நிலவில் இருந்து பயங்கரவாதிகள் வரவில்லை என்றும், பாகிஸ்தானில் இருந்து தான் பயங்கரவாதிகள் வருகின்றனர் என்றும், நாம் அனைவரும் இந்தியாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.