ஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பில் 48 பேர் உயிரிழப்பு - அதிபர் தேர்தர் பிரச்சாரத்தில் தற்கொலைப்படை தாக்குதல்
Sep 18 2019 4:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 48 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதக் குழுக்கள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அங்குள்ள பர்வான் மாகாணத்தில் அதிபர் அஷ்ரப் கனி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது அங்கு நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். அடுத்த சில மணி நேரங்களில் காபூல் நகரின் அமெரிக்க தூதரகம் அருகே நடைபெற்ற குண்டு வெடிப்பில் 22 பேர் பலியாகினர். அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புகளில் 48 பேர் பலியாகினர்.