துனிசியா நாட்டிற்கு கடல்வழியாக வந்த அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 2 பேர் பலி, 14 பேர் மாயம் - தேடும் பணி தீவிரம்
Sep 18 2019 4:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
துனிசியா நாட்டிற்கு கடல்வழியாக வந்த அகதிகள் படகு கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பலியாகினர். மேலும் 14 பேர் மாயமாகியுள்ளனர்.
சிரியா மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகளில் இருந்து கடல்வழியாக ஏராளமானோர் அகதிகளாக தினந்தோறும் வருகை தருகின்றனர். இந்நிலையில் துனிசியா நாட்டின் கடல் பகுதியில் 109 அகதிகளுடன் வந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் மாயமாகினர். மாயமான அகதிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீதமுள்ள அகதிகளை துனிசியா தேசிய பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.