அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை : ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி திட்டவட்டம்
Sep 18 2019 11:24AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எந்த நிலையிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவின் எண்ணெய் ஆலை மீது ஈரான் தான் தாக்குதல் நடத்தியது எனக்கூறி அதற்கு ஆதாரமாக செயற்கைகோள் படம் ஒன்றையும் அமெரிக்கா வெளியிட்டது. மேலும் இந்த தாக்குதலுக்கு எதிர்வினையாற்ற அமெரிக்க ராணுவம் தயாராக இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டார். எனினும், அமெரிக்கா தங்கள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என கூறிய ஈரான் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்தால் போரை சந்திக்க வேண்டிய தேவை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், அமெரிக்காவுடன் இனி எந்தக் காரணத்தைக் கொண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சவுதி அரேபிய எண்ணெய் ஆலை தாக்குதல் சம்பவத்தை பயன்படுத்தி ஈரானுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா திட்டமிடுகிறது என அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் அதற்கு தாங்கள் பலியாக மாட்டோம் எனக் கூறியுள்ள அயத்துல்லா அலி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை என தெரிவித்தார்.