தெற்காசியாவின் உயரமான தாமரை கோபுரம் திறப்பு : ராஜபக்சே அரசு மீது ஜனாதிபதி சிறிசேனா குற்றச்சாட்டு
Sep 18 2019 11:36AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெற்காசியாவின் உயரமான கோபுரம் இலங்கையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட நிலையில், இந்த கோபுரத்தின் கட்டுமானப் பணியில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இலங்கையின் கொழும்பு பகுதியில் தெற்காசியாவின் உயரமான கோபுரம் என்ற பெருமையை கொண்ட தாமரை கோபுரம் கடந்த 16ம் தேதி திறந்து வைக்கப்பட்ட்து. சீனாவின் நிதியுதவி உடன் அமைக்கப்பட்டுள்ள இந்த 356 மீட்டர் உயர கோபுரம் உலகிலேயே 19வது உயரமான கோபுரம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில், கோபுரத்தை திறந்து வைத்து பேசிய அந்நாட்டு ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேனா, கோபுரத்தின் கட்டுமான பணிகளுக்காக சீன நிறுவனம் ஒன்றுக்கு முன்பணமாக 200 கோடி ரூபாய் வழங்கப்பட்ட்தாக முந்தைய அரசு தெரிவித்த்து. எனினும் 2015ம் ஆண்டில் இது தொடர்பாக விசாரணை நட்த்தியதில் அப்படி ஒரு நிறுவனமே இல்லை என்றும் அந்த நிறுவனத்தை போலவே 200 கோடி ரூபாய் பணமும் மாயமாக போனது என்றும் கூறியிருந்தார். ராஜபக்சே அரசு மீதான சிறிசேனாவின் இந்த குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இந்த குற்றச்சாட்டை ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மறுத்துள்ளது.