இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு நடைபெற்ற பொதுத் தேர்தல் - வெற்றிபெற்று ஆட்சியை பிடிப்பது யார் என பொதுமக்கள் ஆர்வமுடன் எதிர்பார்ப்பு
Sep 18 2019 11:00AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஜனநாயகக் கடமையாற்றினர்.
இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடந்தது. இதில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ தொடர்ந்து, 5-வது முறையாக பிரதமர் பதவியை தக்கவைத்து கொள்ள போட்டியிட்டார். இதில் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் வலதுசாரி கட்சியான லிகுட் கட்சி 37 இடங்களை கைப்பற்றியது. அதனை தொடர்ந்து தேசியக் கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்தி ஆட்சியமைத்தார். ஆனால் இஸ்ரேல் பெய்டனு கட்சி பெஞ்சமின் நேட்டன்யாஹூ அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றது. இதனால் நாடாளுமன்றத்தில் அவருக்கான பெரும்பான்மை பலம் 60 ஆக குறைந்தது. இதையடுத்து நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் மக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.