தென் கொரியாவில் பன்றிக்காய்ச்சல் பரவும் அபாயம் : வைரஸ் பீதியால் கொல்லப்பட்ட 4,000 பன்றிகள்
Sep 17 2019 3:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென் கொரியாவில் ஆப்ரிக்கன் ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் பரவுவதை தடுக்க 4 ஆயிரம் பன்றிகள் கொல்லப்பட்டன.
தென் கொரியாவில் உள்ள Paju நகரில் கடந்த வாரம் 5 பன்றிகள் திடீரென உயிரிழந்தன. அவற்றை பரிசோதனை செய்தபோது அவை அனைத்தும் ஆப்ரிக்கன் ஸ்வைன் ப்ளூ எனப்படும் பன்றிக்காய்ச்சல் வைரசால் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. எனவே இந்த வைரஸ் அந்நாட்டில் மேலும் பரவாமல் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக அங்குள்ள பண்ணை ஒன்றில் வளர்க்கப்பட்டு வந்த 4 ஆயிரம் பன்றிகள் இன்று கொல்லப்பட்டன. மேலும் 6 ஆயிரம் பன்றிகளை கொல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.