இந்தியா, அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி - சாகசங்களில் ஈடுபட்ட இருநாட்டு வீரர்கள்
Sep 16 2019 4:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய-அமெரிக்க வீரர்கள் அமெரிக்காவின் செயின்ட் லூயி ராணுவ மையத்தில் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருநாட்டு வீரர்களும் பல்வேறு உடற்பயிற்சிகள் மற்றும் சாகசங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். உயரம் தாண்டி ஓடுதல், கயிறு கட்டி ஏறுதல், போன்ற பல சிரமமான பயிற்சிகளையும் அவர்கள் மேற்கொண்டனர். முன்னதாக, இந்திய வீரர்கள் மூவர்ணக் கொடியை ஏந்தியபடி தொடக்க நாள் அணிவகுப்பில் கலந்து கொண்டனர். "Yudh Abhyas" என்றழைக்கப்படும் இந்த கூட்டு ராணுவப்பயிற்சி வரும் 18-ம் தேதிவரை நடைபெறுகிறது.