பொலிவியா நாட்டின் சாண்டா குரூஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயின் காரணமாக வன விலங்குகள் கடுமையாக பாதிப்பு
Aug 21 2019 3:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பொலிவியா நாட்டின் சாண்டா குரூஸ் பகுதியில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காட்டுத்தீ பற்றிக்கொண்டது. இந்த காட்டுத்தீயின் காரணமாக அங்குள்ள வன விலங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உயிர் பிழைப்பதற்காக அவை ஊருக்குள் படையெடுக்கத் தொடங்கியுள்ளன. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர். இதேவேளையில் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வந்து வன விலங்குகளை மீண்டும் வனத்திற்குள் விடுவதற்காக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.