காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் விருப்பம்
Aug 21 2019 11:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த டொனால்ட் டிரம்ப், இந்தியா- பாகிஸ்தான் இடையே தீவிரமான பிரச்சினைகள் உள்ளன என்றும் இருநாடுகள் இடையே கசப்பு தன்மை நிலவுவதற்கு மதமும் ஒரு காரணம் என்றும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், காஷ்மீரில் தற்போது பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகவும் இந்த விவகாரம் தொடர்பாக இரு நாட்டு பிரதமர்களுடன் பேசியதாகவும் தெரிவித்தார். இம்ரான்கான் மற்றும் மோடி ஆகிய இருவருமே தங்கள் நாட்டை அதிகம் நேசிப்பதாக கூறிய டிரம்ப், இரு நாடுகளுடனும் அமெரிக்கா நல்லுறவை கொண்டிருப்பதாகவும் எனவே, காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் தரப்பின் தலையீடு தேவையில்லை என்று இந்தியா தொடர்ந்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது.