ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச பட்டாசு திருவிழா - இசைக்கு ஏற்ப வானவேடிக்கைகளை நிகழ்த்திய நாடுகள்
Aug 20 2019 7:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரஷ்யாவில் நடைபெற்ற சர்வதேச பட்டாசு திருவிழா போட்டியில், பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு இசைக்கு ஏற்ப வானவேடிக்கைகளை நிகழ்த்தி காண்பித்ததது காண்போரின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது.
ஆண்டுதோறும், சர்வதேச அளவில் பட்டாசு திருவிழா போட்டி ரஷ்யாவில் நடத்தப்பட்டு வருகிறது. இதனை காண உலக முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அந்தவகையில், இந்தாண்டு மாஸ்கோவில் உள்ள ப்ரேடீவ் ஸ்கை பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த போட்டியில் உலகளவில் 8 நாடுகள் பங்கேற்று, தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் வானவேடிக்கைகளை நிகழ்த்தி பார்வையாளர்களை கவர்ந்தனர்.
இதேபோல் ரஷ்யாவும் தனது பங்குக்கு, ஓபரா, பாலெட், ஓபரெட்டா மற்றும் மியூசிக்கல் என்ற 4 கருப்பொருள்களின் அடிப்படையில் வானில் சுமார் 10 நிமிடம் வர்ணஜாலம் புரிந்தது.
இதனை வியந்து பாராட்டிய சர்வதேச நடுவர்கள், ரஷ்யா வெற்றிபெற்றதாக அறிவித்தனர். போர்ச்சுகல் மற்றும் இத்தாலி முறையே 2 மற்றும் 3வது இடத்தை பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. இயற்கை சூழலை புரிந்துகொண்டு, அதற்கேற்ப இசைத்து வானில் வானவேடிக்கை நிகழ்த்தப்பட்டதை கண்டு மகிழ்ந்த பார்வையாளர்கள் அதனை செல்போனில் படம் எடுத்து மகிழ்ந்தனர்.