ப்ரசிலின் ரியோ டி ஜெனிரோவில் 37 பேருடன் பேருந்தை சிறைபிடித்த மர்ம நபர் - 4 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட பயணிகள்
Aug 20 2019 7:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ப்ரசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில், மர்ம நபர் ஒருவர் 37 பயணிகளுடன் பேருந்தை சிறைபிடித்ததால், பரபரப்பு ஏற்பட்டது. 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, கடத்தல் நபரை சுட்டுக்கொன்று பயணிகள் மீட்கப்பட்டனர்.
ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள நிடெராய் பாலத்தில் சென்று 37 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்தை, ஆயுதம் ஏந்திய நபர் ஒருவர் திடீரென சிறைபிடித்துள்ளார். தகவலறிந்த போலீசார் பேருந்தை சுற்றி வளைத்தனர். பேருந்தை தீவைத்து கொளுத்தப்போவதாக, மிரட்டல் விடுத்த அந்நபர், கையில் கிடைத்த பொருட்களுக்கு தீவைத்து வெளியே வீசினார். 4 மணி நேரம் கடத்தல் நபருடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், அந்நபரை சுட்டுகொன்று பயணிகளை மீட்டனர். பேருந்தை சிறைபிடித்ததற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.