ஹாங்காங்கில் ராணுவத்தை கொண்டு போராட்டத்தை அடக்க முயலும் சீனா - போராட்டம் தைவானுக்கும் பரவியதால் புதிய தலைவலி
Aug 18 2019 12:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹாங்காங்கில் ஒருபுறம் சீனா துணை ராணுவப்படையை குவித்து வருகிறது. மறுபுறம் போராட்டம் வலுத்து வருகிறது.
ஹாங்காங்கில் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் இன்று மீண்டும் ஒரு மாபெரும் போராட்டத்திற்கு திட்டமிட்டுள்ளனர். போராட்டத்தை கட்டுக்குள் வைக்க சீனா ஆயிரக்கணக்கான துணை ராணுவப்படையினரை ஹாங்காங் அனுப்பி வைத்துள்ளது. சென்ஜென் பகுதியில் ராணுவத்தினர் முகாமிட்டு தயார் நிலையில் உள்ளனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதனிடையே போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சீனாவில் வாழும் ஹாங்காங் மக்கள் சுமார் 5 லட்சம் பேர் ஒன்றிணைந்து பிரம்மாண்ட கண்டனம் கூட்டம் நடத்தினர். அவர்கள் போராட்டத்தை கைவிட்டு ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி வருகின்றனர். போராட்டத்தின் காரணமாக ஹாங்காங்கின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்றும் அப்போது அவர்கள் கவலை தெரிவித்தனர்.