ஜிப்ரால்டர்-ல் சிறைபிடிக்கப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பல் - தொடர் அழுத்தத்திற்குப்பின் விடுவிக்கப்பட்டது
Aug 17 2019 12:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இங்கிலாந்து நாட்டின் பிராந்தியமான Gibraltar பகுதியில் சிறைபிடிக்கப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பல் பல்வேறு அழுத்தங்களுக்குப்பிறகு அந்நாட்டு அதிகாரிகளால் விடுதலை செய்யப்பட்டது.
கடந்த மாதம் 4-ஆம் தேதி இங்கிலாந்து கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியமான Gibraltar கடல் பகுதியில் ஈரான் நாட்டின் எண்ணெய் கப்பல் கிரேஸ்-1 பயணித்தது. அப்போது Gibraltar காவல்துறையினர், அந்நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள், துறைமுக அதிகாரிகள் ஆகியோர் அந்த கப்பலை தடுத்து நிறுத்தி சிறை பிடித்தனர். ஐரோப்பிய கூட்டமைப்பின் பொருளாதார தடையை மீறி, சிரியா நாட்டுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுவதாக கூறி, அந்த கப்பலை சிறைபிடித்ததாக தெரிவிக்கப்பட்டது. கப்பலில் பயணித்த 28 பேரையும் கப்பலிலேயே சிறை வைத்தனர். இதனிடையே ஈரான் எண்ணெய் கப்பலை விடுவிக்கக்கோரி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் அந்த கப்பலை Gibraltar அதிகாரிகள் விடுதலை செய்துள்ளனர்.