வேகமாக உயரும் கடலின் நீர் மட்டம் :2050க்குள் ஜகார்த்தாவின் ஒரு பகுதி கடலில் மூழ்கும் என்பதால் புதிய தலைநகரை தேர்வுசெய்ய தயாராகும் இந்தோனேசியா
Aug 16 2019 12:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தோனேசிய தலைநகரான ஜகார்த்தாவின் பெரும்பாலான பகுதிகள் 2050ம் ஆண்டிற்குள் கடலுக்கு அடியில் மூழ்கும் ஆபத்து உள்ளதாக சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் போன்றவற்றால் கடல் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால், இந்த நூற்றாண்டுக்குள் உலகின் சில முக்கிய நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் வாய்ப்பு உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதில் முதல் நகராக இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா இருக்கக்கூடும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.
நிலத்தடி நீர் மட்டம் வேகமாக குறைந்துவருவதை தடுக்க முடியாதது, கடல் நீர் மட்டம் உயர்வு, கணிக்கமுடியாத பருவநிலை போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. 2050ம் ஆண்டுக்குள் ஜகார்த்தாவில் மூன்றில் ஒரு பகுதி நீருக்குள் மூழ்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே, புதிய தலைநகரை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையில் இந்தோனேசிய அரசு இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.