ஜப்பானில் கரையை கடக்கும் கார்ஷோ புயல் : ரயில், விமான சேவைகள் ரத்து - 6 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்
Aug 16 2019 9:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜப்பானை 'குரோசா' புயல் தாக்கியதைத் தொடர்ந்து, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. சுமார் 6 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். புயல் சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை.
ஜப்பானின் ஹோன்சு தீவில், ஹிரோஷிமா நகருக்கு அருகே உள்ள குரோ நகரில், 'குரோசா' என பெயரிடப்பட்ட சக்திவாய்ந்த புயல் தாக்கியது. மணிக்கு 144 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்றுடன் கனமழையும் பெய்தது. பலத்த காற்றில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள் சரிந்தன. வீட்டின் மேற்கூரைகளும், சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் தூக்கி வீசப்பட்டன. புயலின்போது பெய்த கனமழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பல இடங்களில் பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். இதற்கிடையில் புயல், மழை காரணமாக ஹிரோஷிமா மற்றும் அதனை சுற்றி உள்ள நகரங்களில் சுமார் 700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. புல்லட் ரெயில்கள் உள்பட அனைத்து வகை ரெயில் சேவையும் நிறுத்திவைக்கப்பட்டதோடு, நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டன.
புயல் காரணமாக, நீர் நிலைகள் அருகே வசிக்கும் சுமார் 6 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். மேலும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு முழுவீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. புயல் சேதங்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.